நிஜங்களோடு
சலனப்படும் நிமிடங்கள்.......
* * *
காற்றோடு கரையும்
கண்ணீர் துளிகள்
***
வலிகளுக்கே சொந்தமான
வாழ்க்கை
***
போதுமடா சாமீ
உன் பிறப்பின் பயன்
***
விழியை கேட்டு
அழகை நீட்டினாய்.....
***
வழியை காட்டி
முட்கள் கொட்டினாய்
***
ஒளியை கொடுத்து
இருளில் முட்டினாய்
***
காதலை மறைத்து
கல்லறை காட்டினாய்
***
இத்தனைக்கும் என் செய்தேன்
உன்னால் நான் பிறப்பதற்கு
****
வேண்டாம்
நீக்கிவிடு மீள் பிறப்பை
இல்லையேல் நிறுத்திவிடு
என் உயிர் படைப்பை...!
பிரியமுடன் சீராளன்
கடவுள் ஒரு மோசக்காரன்
பதிலளிநீக்குதீமையை செய்துவிட்டு பரிகாரமாக நன்மையை செய்து
நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறான்
தீமையை நடக்க விடாமல் செய்திருக்கலாம் அல்லவா ?
அப்படியும் செய்திருக்கலாம்....யாஸ்மின் ,ஆனால் எல்லாமே பிறப்பின் பயன்......
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி