நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 10 ஆகஸ்ட், 2013

மாவீர நண்பனே...!

சிட்டுக் குருவிகளின் சிறுகீச்சு சத்தத்தில் 
மெட்டுக் கட்டி தினம் மேகத்தை பாடியவன்
மொட்டுதிரும் ஈழப்பூ முகம் மலர
பட்டுப்போய் நின்றான் பாரிற்கு உரமாகி ..!

செவ்வாய், 14 மே, 2013

இறைவா இறந்துபார் நீயும் ..!



இறைவா..!
இறந்துபார் நீயும் 
ஈரமில்லா நெஞ்சங்கள் 
இதயத்தில் அறைவதை
காண்பாய் இங்கே..!

திங்கள், 6 மே, 2013

மாறாயோ மானிடனே....?





குருதிப்பால் ஊட்டியவள் 
கொட்டுகின்ற கண்ணீரில்
ஒடமிட்டு விளையாடி 
உவகை கொள்ளும் உள்ளங்கள்
தேடி வந்து தாயணைக்க 
மாறாயோ மானிடனே....?

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பாரத தேசமே....!



இந்திய அரசியலும்...
இறையாண்மை அதிகாரமும் 
ஈழத்தில் எழுதிய காவியம்
இன்னமும் 
குருதி வாசனையோடு 
குதூகலிக்கின்றன
பேரினவாதிகளின்...பிரச்சார மேடையில்...!

சனி, 13 ஏப்ரல், 2013

நாளைய பொழுதில்....!



பிறப்பினில் சிறப் பிழக்கும்
பேதைமனம் கலங்கி நிற்கும்
உறவு சொல்ல வழியின்றி
உள்ளங்கள் ஊமையாகும்..!

பிரிவைத்தேடும் பிரியமானவர்களே ..!



பிரிவைத்தேடும் 
பிரியமானவர்களே 
நீங்கள் என்ன 
பேசாத ஓவியங்களா 
உங்கள் உதிரத்தில் 
ஸ்பரிசங்கள் தீண்டாத 
உயிர் அணுக்களா 
கலந்திருக்கின்றன 
எதுவானாலும் சொல்லுங்கள் 
உங்களைவிட்டு 
உயரப்பறக்கிறேன் 
அதற்காக 
வானம்பாடி அல்ல நான் 
உள்ளூரில் ஓலமிடும் 
ஊர்க்குருவிதான் 
சிறகுகள் சிறிதெனினும் 
உறவுகள் ஓராயிரம் கொண்டவன்..!

இறைவா நீயுமா இப்படி....?



நிஜங்களோடு 
சலனப்படும் நிமிடங்கள்.......
            * * *
காற்றோடு கரையும்
கண்ணீர் துளிகள்
           ***

மானிடம் நோக்கி....!




மாண்புமிகு மனித குலத்துக்குள்
மறைபொருளாய் மௌனிக்கப்பட்ட
மனிதாபிமானத் தேடல்களில்
எனக்கான இடைவெளிகளை
நிரப்பியவாறு என் பயணம்
சூழலின் சூழ்நிலைகளை கடந்து செல்கிறது...!

வைரமுத்து பாடி இருந்தால்..!



உன்வாழ்வு வலியென்று
ஒப்பாரி வைக்காதே
எம்பாடு போனகதை
எறும்புக்கும் காச்சல் வரும்....!

உனக்கென அழுகின்றேன்...!


எழுதவில்லை அவன்பற்றி
மூச்சுக்குள்  முழுவதுமாய்
பழுசுமந்து கூழிட்ட
உழுதவன் கைபிடித்து
தொழுததில்லை ஒருநாளும் ....!