நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 22 ஏப்ரல், 2015

சிந்திப் போமா ..?



எதுஇல்லை இவ்வுலகில் ஏக்கம் கொள்ள
         ஏழ்மைக்கும் வாழ்வுண்டு ! இச்சை பூக்கும்
மதுவில்லா இல்லத்தில்  மக்கட்  செல்வம்
         மகிழ்ந்திருக்கும் மனைமாட்சி மேன்மை கொள்ளும்
புதுமைகளை பூக்கின்ற  விஞ்ஞா னங்கள்
         புத்துலகில்  சாதிவகை அறுக்கும் !ஆன்றோர் 
முதுமொழிகள் கற்றுமனப் பாரம் போக்கின்
         முக்கனிபோல் வாழ்வினிக்கும் ஏற்றம் கொள்ளும் !