நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 14 செப்டம்பர், 2015

கைகொடுப்போம் வாழ்வளிப்போம் !

                                         பட  உதவி :- நன்றி www.pathivu.com


ஈழமெனும் திருநாட்டில் இனிதே வாழ்ந்தும்
       இடம்பெயர்ந்து அலைகின்ற சொந்தம் எல்லாம்
வாழவழி இல்லாமல் தவிக்கும்  எங்கள்
       வம்சத்தின் நிலைதன்னை எண்ணிப் பார்ப்போம்
தாழமுக்கம் போல்வந்த போரின் மீதம்
       தவிப்புகளை விட்டேகிக் கலைந்த போதும்
ஏழை'எனும் நாமத்தால் எங்கள் மக்கள்
       எதிர்காலம் அழிவதுதான் இன்னும் ஏனோ ?