நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 20 ஜூன், 2018

வெள்ளொத்தாழிசை


நேரிசை  வெள்ளொத்தாழிசை !

தாய்மொழிச் சிறப்பு !

நாவாரப் பாடும் நறுந்தமிழே ! நற்குரவர்
தேவாரப் பாட்டின் திருத்தமிழே - கோவாத
பூவாரம் ஆவாய் பொலிந்து !

நற்றுணை ஆகும் நறுந்தமிழே ! நற்குரவர்
சொற்றுணை ஆகும் சுடர்தமிழே - பற்றுடனே
பொற்றுணை ஆவாய் பொலிந்து !

நன்னெறி ஊட்டும் நறுந்தமிழே ! நற்குரவர்
தன்னெறி காட்டும் தனித்தமிழே - மன்பதையின்
பொன்னெறி ஆவாய் பொலிந்து !



இன்னிசை வெள்ளொத்தாழிசை!
 
மானிடம் காப்போம் !

வண்ணக் கனவுகளில் வாழும் மனிதர்களின்
எண்ணக் குவளைகளில் ஏந்தும் பகையழிய
பண்ணைக் கொடுப்போம் பணிந்து !

வல்லார் அடிமைகளாய் வாழும் மனிதர்களின்
சொல்லாத் துயர்களையத் தோகை மனம்விரித்துப்
பல்லாண் டணைப்போம் பணிந்து !

வாசம் மதுவென்று வாழும் மனிதர்களின்
வேசம் களைந்தெறியும் வேட்கை தருவித்துப்
பாசம் கொடுப்போம் பணிந்து !

 
பாவலர் வீ.சீராளன்